Tuesday 16 December 2014

நம்ம கடலூர் - விடுதலைப் போராட்ட தியாகி கடலூர் அஞ்சலையம்மாள்:

கடலூர் முது நகரில் சுண்ணாம்புக்காரத் தெருவிலுள்ள 38ஆம் எண் இல்லத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்த அஞ்சலையம்மாள் திண்ணைப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். 


பெண்ணடிமைத்தனம் முற்றிலும் ஒழிந்து போகாத காலகட்டத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த பெணமணி தன்னை விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டு பல முறை சிறை சென்றதென்பது வரலாற்றுச் சாதனையாகும். 1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதே அஞ்சலையம்மாளின் பொது வாழ்க்கைத் தொடங்கி விட்டது. 1927 ஆம் ஆண்டு நீலன் சிலையகற்றும் போராட்டம், 1930-உப்பு சத்தியாகிரகப்போர், 1933-கள்ளுக் கடை மறியல், 1940- தனிநபர் சத்தியாகிரகம் எனப் பல போராட்டங்களில் ஈடுபட்டு கடலுர், திருச்சி வேலூர், பெல்லாரி ஆகிய சிறைகளில் நானகரை ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றவர். குறிப்பாக வேலுர் பெண்கள் சிறை அவர் அடிக்கடி சென்று வந்த சிறையாகும். 1932 ஆம் ஆண்டு வேலுர் பெண்கள் சிறையில் 727 ஆம் எண் கைதியாக அஞ்சலையம்மாள் இருந்த போது அவர் நிறை மாத கர்ப்பிணி, சிறையிலேயே குழந்தை பிறந்துவிடுமென்பதால் அவரை வெளியில் அனுப்பி குழந்தை பிறந்ததும் மீண்டும் சிறையில் அடைத்தனர். அதனால் சிறையில் குழந்தை பிறந்ததற்கான எவ்வித ஆவணமும் இல்லை.

அப்போது பிறந்தவர்தான் ஜெயவீரன் இன்றும் கடலூர் முதுநகரில் சின்னஞ்சிறு குடிசையில் வாழ்ந்து வருகிறார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பிற்கு அருகிலுள்ள நற்குணம் என்ற சிற்றூரில் முருகப்படையாட்சி என்பவரை அஞ்சலையம்மாள் திருமணம் செய்து கொண்டார். அஞ்சலையம்மாளின் அரசியல் பணிக்கு உறுதுணையாகக் கணவரும் கடலுரிலேயே தங்கி விடுதலைப் போரில் பங்கேற்று அவரும் பல முறை சிறை சென்றுள்ளார் இவர்களின் மூத்த மகள் அம்மாப்பொண்ணு ஒன்பது வயதிலேயே நீலன் சிலையகற்றும் போரில் கலந்து கொண்டு சிறை சென்றவர். அவரை காந்தியடிகள் வார்தாவுக்கு அழைத்துச் சென்று லீலாவதி எனப் பெயர் சூட்டி சபர்மதி ஆசிரமத்தில் வளர்த்தார். அங்கு செவிலியர் படிப்பை முடித்து சென்னை வந்ததும் தன்னைப்போலவே இளம் வயதில் விடுதலைப் போரில் ஈடுபட்ட பன்மொழிப் புலவர் ஜமதக்னியைத் திருமணம் செய்து கொண்டார். காங்கிரஸ் வளர்ச்சிக்கும் அஞ்சலையம்மாள் அரும்பாடு பட்டுள்ளார். கடலூரில் அஞ்சலையம்மாளின் இல்லம் எப்போதும் காங்கிரஸ் தொண்டர்களால் நிறைந்திருக்கும். அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடந்த வண்ணமிருக்குமாம். வீட்டையே அடகு வைத்து கட்சிப் பணிக்காக செலவிட்டிருக்கிறார். கடனை அடைக்கமுடியாமல் வீடு ஏலத்திற்கு வந்தது நல்ல உள்ளம் கொண்ட சிலர் வீட்டை மீட்டுத் தந்துள்ளனர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அஞ்சலையம்மாள் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்.

1946 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள் அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை அவைக்குறிப்புகளில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. "கதர் என்று மகாத்மா கொண்டு வந்தார், கிராமங்களில் நூற்றால் ஒரு சிட்டம் இரண்டரை அணா விற்கிறது. இதை நாம் பலப்படுத்திட பஞ்சு வெளியில் போகாமல் கிராமங்களிலேயே வைத்து நூற்க வேண்டுமென்று அரசாங்கத்திலே சட்டம் இயற்றி விட்டால் துணி பஞ்சமில்லாமல் கவுரவமாய் இருப்போம்... கிராமத்தில் பயிரிடுவோர் காலையில் எழுந்து வயலுக்குப் போய்விடுவார்கள். பத்து மணிக்கு அவர்களுக்கு சோறு கொண்டு போவார்கள், அதைச் சாப்பிட்டு விட்டு மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வருவார்கள். நாம் மூன்று வேளை சாப்பிட்டு விட்டு மருத்துவரிடம் செல்கிறோம். அவர்களுக்கு உணவில்லை, துணியில்லை. இங்கே ஒரு கோட்டு இரண்டு கோட்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய துணியைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" .(சட்டமன்ற அவைக்குறிபு தொகுதி-1,பக்.317,மே,ஜூன்-1946) ஏழைப் பணக்காரர் நிலையை ஒப்பிட்டு பேசியது அவரின் பொது உடைமைச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. உழவு, நெசவு ஆகிய இரு தொழில்களையும் அவர் குடும்பத்தினர் செய்துள்ளனர். இருப்பினும் நெசவுத் தொழிலையே முதன்மையான தொழிலாகச்செய்துள்ளனர். இவர் கணவர் முருகப்படையாட்சி 1932 ஆம் ஆண்டு கடலுர் சிறையில் அடைக்கப்பட்ட போது அவருக்கு வயது 56 தொழில் நெசவு என்று சிறைப் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அஞ்சலையம்மாளும் அவர் கணவர் முருகப்படையாட்சியும் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி தறி நெசவு செய்து நீண்டநாள் கட்சிப்பணி செய்துள்ளனர். நெசவு செய்த கைத்தறி துணிகளைச் சுமந்து கொண்டு தந்தைப் பெரியாரோடு சென்று சிற்றூர்களில் விற்றுள்ளனர். அன்றைய தென்னார்க்காடு மாவட்டக் கழக உறுப்பினராகவும் அஞ்சலையம்மாள் பணியாற்றியுள்ளார். அப்போது அவரின் முயற்சியால் தான் கடலூர் அரசு மருத்துவமனைக்கு எக்ஸ் கதிர் கருவி கொண்டுவரப் பட்டுள்ளது. ஒரு முறை கடலூருக்கு காந்தியடிகள் வந்த போது அவரைச் சந்திக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அஞ்சலையம்மாள் பர்தா அணிந்து கொண்டு மாறு வேடத்தில் காந்தியடிகளை குதிரை வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளார். அதனால் காந்தியடிகள் அஞ்சலையம்மாளை தென்னாட்டின் ஜான்ஸிராணி என அழைத்தாராம். பண்ணுருட்டியைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் நல்ல குடி நீர் கிடைக்காமல் மக்கள் நரம்பு சிலந்தி நோயினால் பாதிக்கப் பட்டிருந்தனர். அத்தகைய சிற்றூர்களில் அஞ்சலையம்மாள் விழிப்புணர்வுப் பரப்புரை செய்தார். வீராணம் ஏரியிலிருந்து புவன கிரிக்கு பாசன நீர் செல்லும் பெரிய வாய்க்காலில் ஒரு கிளை வாய்க்காலை ஏற்படுத்தி தீர்த்தாம்பாளையம் என்ற சிற்றூருக்கு பாசன வசதி செய்தார் அவ்வாய்க்கால் இன்றும் அஞ்சலை வாய்க்கால் என்றே குறிப்பிடப் படுகிறது. பெண் என்பவள் சமைக்கப் பிறந்தவள் என்னும் ஆணாதிக்கப் பொதுப் புத்தியின் வெளிப்பாடுதான் இது.

1921இல் காந்தியார் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். அஞ்சலையம்மாளும் தீவிரமாகச் செயல்பட்டார். நீலன் சிலை அகற்றும் போராட்டம், உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல், தனிநபர் சத்தியாகிரகம் உள்பட பல போராட்டங்களில் பல மாதங்கள் சிறையில் கழித்திருக்கிறார். 1921 முதல் 1943 வரை 22 ஆண்டுகளில் நான்கரை ஆண்டுகள் சிறையிலேயே அவரது வாழ்க்கை கழிந்தது. அஞ்சலையம்மாளின் மூத்த மகள் அம்மாக்கண்ணு. நீலன் சிலையகற்றும் போராட்டத்தில் அம்மாவுடன் கலந்துகொண்டு சிறை சென்றார். தண்டனை முடிந்த பிறகு, 9 வயதான அம்மாக்கண்ணை காந்தியார் அழைத்துச் சென்றார். லீலாவதி என்று பெயர் சூட்டினார். தன்னுடைய ஆசிரமத்திலேயே வளர்த்தார்.

கடலூரில் ஒருமுறை அஞ்சலையம்மாளைச் சந்திக்க விரும்பினார் காந்தியார். சந்திக்க தடை இருந்ததால், பர்தா அணிந்து சென்று, காந்தியாரைச் சந்தித்தார் அஞ்சலை யம்மாள். அவரை, தென்னாட்டு ஜான்சி ராணி என்று பாராட்டினார் காந்தியார். 1932இல் வேலூர் பெண்கள் சிறையில் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார் அஞ்சலையம்மாள். சிறையில் குழந்தை பிறப்பதைத் தடுக்கும் விதத்தில் வெளியே அனுப்பினர். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சிறையில் அடைத்தனர்.

எப்பொழுதும் காங்கிரஸ் தொண்டர்களால் நிறைந் திருக்கும் அஞ்சலையம்மாளின் வீடு. வருகிறவர்களுக் கெல்லாம் தன்னால் முடிந்த உணவைக் கொடுத்து உபசரிப்பார். வீட்டையே அடமானம் வைத்து கட்சிப் பணி செய்திருக்கிறார். சட்டமன்றத்துக்கு 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்காகப் பணியாற்றியிருக்கிறார். பண்ருட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர்.

வீராணம் ஏரியிலிருந்து புவனகிரிக்குப் பாசன நீர் செல்லும் வாய்க்காலில் இருந்து ஒரு வாய்க்காலை தீர்த்தாம்பாளையம் நோக்கித் திருப்பிவிட்டார். இதனால் அங்கு தண்ணீர்ப் பிரச்சினை தீர்ந்தது. இது அஞ்சலை வாய்க்கால் என்று அழைக்கப்படுகிறது.

Saturday 6 December 2014

நம்ம கடலூர் - சிதம்பரம் நடராசர் கோயில்:

சிதம்பரம் நடராசர் கோயில்:


நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது. அத்துடன் பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரானது தில்லை என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இத்தலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது.

இத்தலத்தின் மூலவர் திருமூலநாதர், தாயார் உமையாம்பிகை (சமஸ்கிருதம்:சிவகாமசுந்தரி). இத்தலத்தின் தலவிருட்சமாக தில்லை மரமும், தீர்த்தமாக சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் தீர்த்தங்களும் உள்ளன. இத்தலமானது பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான ஆகாயத் தலமாகும். இத்தலம் திருநீலகண்ட நாயனார் அவதாரத் தலம் எனவும் கூறப்படுகின்றது. முன்னைக் காலங்களிலே இத்தலம் சேர, சோழ பாண்டிய, பல்லவ, விஜய நகர அரசுகளாலே புனரமைக்கப்பட்டு வந்துள்ளதோடு மட்டுமன்றி இவ்வரசுகளிடமிருந்து இத்தலத்திற்கு மானியங்களும் வழங்கப்பட்டுள்ளன.

சிதம்பரம் திருமூலராலும், பதஞ்சலி மற்றும் வியாக்கியபாதர் எனும் முனிவர்களாலும் வணங்கப்பட்டுள்ளது. 275 பாடல் பெற்ற சிவத்தலங்களில் முதல் முக்கிய இடம் வகிக்கும் தலம் இதுவே ஆகும்.

Wednesday 3 December 2014

நம்ம கடலூர் - பிச்சாவரம்:

பிச்சாவரம் தமிழ்நாட்டில் சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி. இப்பகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ளது.பித்தர்புரம் என்ற பெயரே, பிச்சாவரம் என்று மருவியது. இவ்வூரில் அலையாத்திக் காடுகள் (சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள்) மிகுந்துள்ளன. இங்குள்ள அலையாத்திக் காடே உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு ஆகும்.


பிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர்கள். இப்பகுதி சிறுசிறு தீவுகள் நிறைந்து காணப்படுகிறது. இக்காடுகளுக்கு நிறைய பறவைகள் வலசையாக வருகின்றன. மொத்தம் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான (சிற்றினங்கள்) பறவைகள் வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது.

Sunday 30 November 2014

நம்ம கடலூர்: கடலூர் (Cuddalore)



பெயர்காரணம் : 

கடலூர் என்னும் பெயர் ஏற்பட்டதற்கு காரணம் : இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம். 

வரலாறு : 
(விழுப்புரம் மாவட்டத்திற்கு உரிய வரலாறே இம்மாவட்டத்திற்கும் பொருந்தும்).

எல்லைகள் : 

தெற்கே திருச்சிராபள்ளி மாவட்டமும்; தென்கிழக்கே தஞ்சாவூர் மாவட்டமும்; கிழக்கே வங்காள விரிகுடாவும்; மேற்கே விழுப்புரம் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

நீர்வளம் : 

இம்மாவட்டத்தில் வந்து கலக்கும் ஆறுகளும், பாசனத்துக்கு உதவும் ஆறுகளும் வருமாறு : கெடிலநதி, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம், மணிமுத்தாறு. 

ஏரிகள் : 

வீராணம் ஏரியால் 18,160 ஹெக்டேர் பாசனப்பரப்பு பயன் பெறுகிறது. வாலாஜாஏரி-4,612 ஹெக்டேர் நிலத்திற்குப் பாசனம் அளிக்கிறது. பெருமாள் ஏரி-2633ஹெக்டேர் நிலத்திற்குப் பாசனம் அளிக்கிறது. திருவதிகை அணை, வானமாதேவி அணை, திருவஹஂந்திரபுரம் அணை மூலம் 10,000 ஏக்கர் நிலம் பயன் பெறுகிறது. 

கனிவளம் : 

இம்மவாட்டத்தில் சுண்ணாம்புக்கல் மிகுதி என்பது நாடறிந்த உண்மை. களிமண்வகைகளிலே உயர்ந்த களிமண் காடாம் புலியூருக்கு வடக்கேயும், பண்ணுருட்டி கடலூர்களுக்குத் தெற்கேயும் கிடைக்கின்றன. 

பணிக்கன்குப்பத்தில் பீங்கான் தொழிலுக்கேற்ற வெள்ளைக் களிமண் கிடைக்கிறது. மாமண்டூரில் துத்தநாகம், ஈயம், செம்பு படிவங்கள் இருப்பதாகக் கண்டு படிக்கப்பட்டுள்ளன. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியும் தரமான சைனாக் களிமண்ணும் கிடைக்கின்றன. 

வேளாண்மை : 

சாகுபடி பரப்பு : 2,46,125 ஹெக்டேர். இதில் நெல் சாகுபடியாகும் பரப்பு 1,31,000 ஹெக்டேர். விவசாயத்தில் ஈடுபட்டிருப்போர் : 6,33,768 பேர். கொள்ளிடம் பாயும் பகுதிகளில் நெல்லும், பண்ருட்டி வட்டத்தில் பலாபழமும், முந்திரியும் பெருமளவில் விளைகின்றன. மணிலாப்பயிர் விளைச்சல் இம்மாவட்டத்தில் அதிகம் நல்ல எண்ணெய் சத்து உள்ள காரணத்தால் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நெல்லையடுத்து, நஞ்சையிலும், புஞ்சையிலும் கரும்பு விளைகிறது. இனிப்புச்சத்து அதிகம் உள்ள கரும்புகள் இங்கு உற்பத்தியாகின்றன. புஞ்சை நிலத்தில் கேழ்வரகு, கம்பு, எள், சோளம், துவரை, வரகு விளைகின்றன. கரிசல் மண் உள்ள சில இடங்களில் குறைந்தளவு பருத்தியும் விளைகிறது.


ஆலைகள் :

சர்க்கரை ஆலைகள், கடலூர் வட்டத்தில் நெல்லிக் குப்பம், விருத்தாசலம் வட்டத்தில் பெண்ணாடத்திலும் உள்ளன. கடலூரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையும் பண்ருட்டி, கடலூர் முதலிய இடங்களில் இரசாயனக் கலவை உரத்தொழிற்சாலைகளும் உள்ளன. 

மின்சார தொழில் : 

வடலூரில் சேஷசாயி இண்டஸ்ட்ரீசார் தயாரிக்கும் ஹெச்.டி மற்றும் எல்.டி இன்சுலேட்டர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. 

கடல் சார்ந்த தொழில்கள் : 

கடலூர் மாவட்டம் சிறப்பான கடற்கரையை பெற்று விளங்குகிறது. இங்கு 14,000 டன்கள் மீன் மற்றும் இறால் வகைகள் பிடிக்கப்படுகின்றன. இங்கு 1 கி.மீ தொலைவில் 234 டன்கள் கிடைக்க வாய்ப்பிருந்தும் 114 டன்கள் மட்டுமே பிடிக்கப்படுகின்றன. கால்வாய்களும், ஆறுகளும் சுமார் 480 கி.மீ நீளத்திற்கு ஓடிய போதிலும் கடலூரும்-பரங்கிப்பேட்டையும் மற்ற மீன்பிடி நிலையங்களை விடச் சிறந்த முறையில் பணியாற்றுகின்றன. 1. மீன் மற்றும் இறால் - 2 சிறிய தொழில் நிலையங்கள் மட்டும் உள்ளன. 

பதனத் தொழிற்சாலை 2. ஐஸ் தயாரிப்பும்-இறைச்சி - மூன்று சிறிய தொழில் நிலையங்கள் கடலூரிலும் பாதுகாத்தல் ஒன்று பரங்கிப் பேட்டையில் உள்ளன. 

சிப்காட் தொழிற்கூடம் : சிதம்பரம்-கடலூர் சாலையில், கடலூர் புதுநகரிலிருந்து 9கி.மீ தொலைவில், சுமார் 460.33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள 

வழிபாட்டிடங்கள் : 

சிதம்பரம் : 

Natraj Templeசிதம்பரத்தை 'தில்லை' என்று அழைப்பார்கள் அதற்குக் காரணம் தில்லை மரங்கள் அதிகமாயிருந்தது என்று சொல்லப்படுகிறது. இக்கோயிலில் ஆடவல்லான் (நடராசர்) இருக்கும் சிற்றம்பலம், அதனை அடுத்து எதிரிலுள்ள பொன்னம்பலம், ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி கற்சிலையுள்ள நடனசபை, பேரம்பலம், ஆயிரங்கால் மண்டபம் என ஐந்து சபைகள் உள்ளன. சிற்றம்பலத்தின் கூரை 21,600 தங்க ஓடுகளால் ஆனது. நிமிடத்திற்கு 15 மூச்சு வீதம் ஒரு நாளைக்கு (15ஜ்60ஜ்24) 21,600 மூச்சு ஆகிறது. இதுவே தங்க ஓடுகளின் மொத்த எண்ணிக்கை. பொன்னம்பலத்திலிருந்து சிற்றம்பலம் ஏற ஐந்து படிக்கட்டுகள் உண்டு. இவை ஐந்தெழுத்துப் படிகள். ஐந்தெழுத்தின் வழி இறைவனைக் காணலாம். படியின் இருபுறமும் யானை உருவங்கள் உள்ளன. இந்த படிகளில் பல சோழ மன்னர்கள் முடிசூட்டிக் கொண்டதாக வரலாறு கூறுகிறது. திருநடனம் ஐந் தொழில்களைக் குறிக்கும். கூத்தனின் (நடராசர்) இடப்பக்கம் சிகாமசுந்தரி. வலப்பக்கம் 'சிதம்பர ரகசியம்' உள்ளது. இது ஆகாயகத் தலம். இறைவன் வெளியாக இங்கு இருக்கிறான் என்பது ஐதீகம். இதன் அறிகுறியாக ஆகாயத்திற்குப் பல பொன் வில்வ மாலைகள் தொங்க விடப்பட்டுள்ளன. வானளாவ நிற்கும் நான்கு கோபுரங்களும் காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். பல மன்னர்களின் திருப்பணியைக் கண்ட கோயிலாதலால் இங்கு அவரவர் கால கலை நுட்பங்களைக் காணலாம். நடனக் கலையில் அடவுகள் இங்குள்ளது போல அவ்வளவு அழகாக வேறு எங்கும் காண முடியாது. பிரகார மண்டபங்களில் நாயக்கர் கால ஓலியங்களைக் காணலாம். இங்குச் சிவனையும்-திருமாலையும் ஒருங்கே ஓரிடத்தில் நின்று காணலாம். இப்படி வேறு எவ்வூரிலும் காண இயலாது. கோயில் என்றாலே அது சிதம்பரம் என்பது வழக்கம். 

திருவிழாக்கள் : 

மார்கழித் திருவாதிரை, ஆனி உத்ரம், சித்திரைத் திருவோணத்திலும், ஆவணி, புரட்டாசி, மாசி 14-ஆம் பிறை நாளிலும் நடக்கும் 4 திருமுழுக்குகளும் பொன்னம்பலத்தில் நடைபெறும். 

திருப்பாதிரிப் புலியூர் : 

இறைவன் : தோன்றாத்துணைநாதர், அம்மை : தோகையம்பிகை. கடலூர் புது நகரத்தின் ஓர் அங்கமாகத் திருப்பாதிரிப் புலியூர் உள்ளது. திருப்பாதிரிப் புலியூர் புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கில் 1 கி.மீ தொலைவில் பாடலீசுவரர் கோவில் என்கிற பெரிய கோவில் உள்ளது. புலிக்கால் முனிவர் பூசித்ததால் இப்பெயர் பெற்ற தென்பர். அப்பரை கற்றுணில் கட்டிக் கடலில் எறிந்த போது, "சொற்றுணை வேதியன்" என்னும் பதிகம்பாடி,அக்கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறியவூர் 'கரையேறவிட்ட குப்பம்' என்னும் பெயரில் உள்ளது. வைகாசி மாதத்தில் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. 

திருவயிந்திரபுரம் : 

வைணவத் தலம். பெருமாள்: தேவ நாதர், தாயார்: வைகுந்த நாயகி. திருப்பதியில் உறையும் பெருமாளைச் சின்னவர் என்றும், திருவயிந்திரபுரத்தில் உரையும் தேவநாதப் பெருமாளைப் பெரியவர் என்றும் சொல்வர். திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கில் 5 கி.மீ தொலைவில் இந்த வைணவத் தலம் அமைந்துள்ளது. வேதாந்த தேசிகரால் பாடல் பெற்றத் தலம். ஒவ்வொராண்டும் மார்கழி மாதத்தில் நடைபெறும் " இராப்பத்து பகல்பத்து" உச்சவம், "சொர்க்க வாசல் திறப்பு விழா" சிறப்பாக நடைபெறும். 

திருமாணிக்குழி :

திருவயிந்திரபுரம் கோயிலுக்கு 2 கி.மீ தொலைவில் உள்ளது-இவ்வூர்; இறைவன்-மாணிக்கவரதர்; இறைவி-மாணிக்கவல்லி; ஆண்டவன் முன்பு எப்போதும் திரை இடப்பட்டே இருக்கும். திரையில், பதினொரு உருத்திரர்களுள் ஒருவரான வீமர் என்பாரின் திரு உருவம் மட்டும் எழுதப்பட்டுள்ளது. முதலில் இவருக்கு எல்லாவித பூசையும் நிறைவேற்றப்பட்டு அதன் பிறகே திரை விலக்கப்பட்டு இறை வழிபாடு நடைபெறுகிறது. மாணி என்பது திருமாலின் வாமன அவதாரத்தைக் குறிக்கும். திருமால் மாணி வடிவம் கொண்டு மாவலியை அழித்தபின், இங்கு வந்து சிவனை வழிபட்டதாகப் புராணம் கூறுகிறது. கோயிலில் இலிங்கம் இருக்கும் பகுதி, சிறிது பள்ளமாக இருக்கும். எப்போதும் அங்கே தண்ணீர் சுரந்து கொண்டிருக்கும், எனவே மாணி வழிபட்டக் குழி மாணிக்குழி ஆயிற்று. 

திருத்தினை நகர் : 

புதுச்சத்திரம் புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது- இறைவன் பெயர்-சிவக் கொழுந்தீசர். இறைவி-இளம் கொம்பனாள். அதிசயிக்கத்தக்க வகையில் தினை விளைந்த காரணத்தால் 'திருத்தினை நகர்' என்ற பெயர் ஏற்பட்டது. இவ்வூரிலுள்ள தாமரைக் குளம்நோய் தீர்க்கும் என்று நம்பப்படுகிறது. 

திருச்சோபுரம் : 

கடலூர் புகைவண்டி நிலையத்திற்கு அருகில் உள்ள ஆலப்பாக்கம் புகைவண்டி நிலையத்திற்கு வடகிழக்கே 3 கி.மீ தொலைவில் உள்ள இவ்வூரை தியாகவல்லி என்றும் அழைக்கின்றனர். முதல் குலோத்துங்க சோழ மன்னனின் பட்டத்தரசி தியாக வல்லி,திருப்பணி செய்ததால் இப்பெயர் ஏற்பட்டது. இறைவன்பெயர்: சோபுரநாதர் இறைவி: சோபுர நாயகி. 

திரு அதிகை : 

'அதியரைய மங்கை' என்ற பெயரே 'அதிகை' ஆகிவிட்டது. கெடிலம் ஆற்றின் வடகரையில் பண்ணுருட்டிப் புகை வண்டி நிலையத்துக்குத் தென்கிழக்கில் 1 1/2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. எட்டு வீரட்ட தலங்களுள் இதுவும் ஒன்று. மகேந்திரவர்மன் இங்கு 'குணதரவீச்சுரம்' என்னும் கோயிலைக் கட்டியுள்ளளான். இறைவன்-அதிகை வீரட்டநாதர், அம்மை-அதிகைநாயகி. இக்கோவிலின் அமைப்பும், சிற்பங்களும் காணத்தக்கவை. 

திருநெல்வாயில் : 

இறைவன் பெயர் : உச்சிநாதர், இறைவி : கனகாம்பிகை. சிவபுரி என்று தற்போது அழைக்கப்படுகிறது. சிதம்பரத்திலிருந்து 2 1/2 கி.மீ தொலைவில் உள்ளது- 

திருக்கழிப்பாலை : 

காரைமேடு எனவும் குறிப்பிடப்பெறும் இவ்வூர் சிவபுரிக்கு அருகில் உள்ளது. இறைவன்: பால் வண்ண நாதர், இறைவி : வேதநாயகி. 

திருவேட்களம் : 

இறைவன்-பாசுபசுதேசுரர், இறைவி-நல்லநாயகி. திருவேட்களம் என்ற ஊரே தற்போது அண்ணாமலை நகர் என்று அழைக்கப்படுகிறது. அர்ச்சுனனுக்கு அம்பு கொடுக்கும் விழா, வைகாசித் திங்கள்-விசாக நாளில் சிறப்பாக நடைபெறுகிறது. 

திருநாரையூர் : 

சிதம்பரத்திற்கு தென் மேற்கே, காட்டு மன்னார்குடி செல்லும் வழியில் 16 கி.மீ தொலைவில் உள்ளது. நாரை பூசித்தஊர் என்பது ஐதீகம். மூவர் தேவாரங்களைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி, பிறந்து ஊர். அவரால் பூசிக்கப்பட்ட பொல்லாப்பிள்ளையாரும் இங்கு உள்ளது. 

திருக்கடம்பூர் : 

சிதம்பரத்திற்கு மேற்கேயுள்ள காட்டு மன்னார்குடிக்கு 5 கி.மீ தொலைவில் உள்ளது.மேலைக் கடம்பூர் என்றும், கரக்கோவில் என்றும் இத்தலத்திற்குப் பெயர் உண்டு. இங்குக் கருவறை தேர் போன்று அமைந்துள்ளது. இவ்வூருக்கு கிழக்கே 2. கி.மீ தொலைவில் 'கடம்பூர் இளங்கோயில்' உள்ளது. இறைவன்:அமுதகடேசுரர், இறைவி:சோதிமின்னம்மை. 

திருநெல்வாயில் அரத்துறை : பெண்ணாகடம் புகைவண்டி நிலையத்துக்குத் தென்மேற்கே 5 கி.மீ தொலைவில் இது நிவாநதி என்னும் வெள்ளையாற்றின் வடகரையிலுள்ளது. இறைவன்-அரத்துறையப்பர், அம்மை-ஆனந்தநாயகி. 

திருத்துங்கானை மாடம் : 

பெண்ணாகடம் புகைவண்டி நிலையம், விருதாசலத்திக்கு தென்மேற்கில் 18 கி.மீ தொலைவில் உள்ளது. இக்கோவிலின் விமானம் 'யானையின் முதுகு' போல உள்ளது என்பதால் துங்கானை மாடக் கோயில் வகையைச் சார்ந்தது என்பர். கலிக்கம்ப நாயனார், அச்சுத களப்பாளர் வாழ்ந்தவூர். திருநாவலூர் : 

பண்ணுருட்டி புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கே 16 கி.மீ தொலைவில் உள்ள இவ்வூரை 'திருநாம நல்லூர்' என அழைக்கின்றனர். சுந்தர மூர்த்தி நாயனார் பிறந்தது இவ்வூரில்தான். இங்குள்ள வரதராசப் பெருமாள் கோயிலில் நாவல் மரம், சுந்தரமூர்த்தி நாயனார் சிலை முதலியவை காணத்தக்கவை. 

திருமுது குன்றம் : 

இன்று இவ்வூரை விருத்தாசலம் என அழைக்கின்றனர் இது நல்ல தமிழ் பெயரின் வடமொழி ஆக்கம் ஆகும். புகைவண்டி நிலையத்தலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. அருகில்மணிமுத்தாறு ஓடுகிறது. மாடவீதிகள் அழகாக அமைக்கப் பட்டிருக்கின்றன. தேவாரபாடல் பெற்ற தலம், இறைவன் பழமலைநாதர், இறைவி: பெரிய நாயகி. கோவில் சோழர் காலத்தில் திருபணி செய்யப்பட்டுள்ளது. அகன்ற வ்ாயிற்கோபுரத்தை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். 

திருக்கூடலையாற்றுர் : 

விருத்தாசலத்திற்குக் கிழக்கில் 23 கி.மீ தொலைவில் உள்ளது. மணிமுத்தாறு, வெள்ளாறும் கூடும் இடமாதலால் இப்பெயர் பெற்றது. இறைவன்: நெறி காட்டு நாயகர்,இறைவி: புரிகுழலம்பிகை. 

திருவெருக்கத்தம் புலியூர் : 

தற்போது இராசேந்திரப்பட்டினம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. விருத்தாசலத்துக்கு தெற்கே 11 கி.மீ தொலைவில் உள்ளது. இறைவன்: திருநீலகண்டேசுரர். இறைவி: நீலமலர்க் கண்ணம்மை. 

திருத்துறையூர் : 

திருத்துறையூர் புகைவண்டி நிலையத்திலிருந்து ஊர் 2 1/2 கி.மீ துரத்தில் உள்ளது.சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்க்கையுடன் தொடர்புள்ள ஊர். இறைவன்: சிட்டகுருநாதர்,இறைவி: பூங்கோதை நாயகி. அருணந்தி சிவாச்சாரியார் கோயிலும், சுந்தரரை தடுத்தாட் கொண்ட பெருமான் கோயிலும், வெளியில் குளத்துக்கருகில் உள்ளன. 

சுற்றுலா தலங்கள் : 

பிச்சாவரம் : 

Pichavaramசிதம்பரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் பிச்சாவரம் அமைந்துள்ளது. காடுகள் சூழ்ந்த பிச்சாவரம், இம்மாவட்டத்தின் ஓர் அழகு மிக்க சுற்றுலா இடமாகும். கல்கத்தாவி லிருக்கும் சுந்தரவனக் காடுகளுக்கு அடுத்தபடியாகச் சுர புன்னை மரங்கள் மண்டிக் கிடக்கும் இடம். சுரபுன்னை போன்ற அரிய மரங்களையும், ஏராளமான மூலிகைகளையும் கொண்ட தீவாக காட்சியளிக்கிறது. இயற்கையழகு உள்ள இடமாதலால் வெளிநாட்டினரை வெகுவாக கவர்கிறது. படகில் ஏறி சுற்றிப்பார்க்கத் தொடங்கினால் இரண்டு பக்கங்களிலும் சுரபுன்னை மரங்கள் மண்டிக்கிடக்கும் இயற்கை அழகை காணலாம். காடு முழுவதும் சுற்றிப் பார்க்க கால்வாய் வசதியாக இருக்கிறது. அரசுபடகுகளும், தனியார் படகுகளும் உள்ளன. இவ்விடம் தனித்தனி தீவுப் பிரதேசம் ஆகையால் பயணிகளுக்குப் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. தங்குவதற்கு ஏற்ற பயணியர் விடுதிகள் உண்டு. இதன் அருகில் போர்ச்சுக்கீசியர்களால் உண்டாக்கப்பட்ட போர்டோ நோவா கடல் துறைமுகம் அருகில் கடல் ஆய்வு மையம் ஒன்று உள்ளது. 

கெடிலத்தின் கழிமுகம் : 

கெடிலநதி கடலூருக்கருகில் மூன்று இடங்களில் கடலில் கலக்கிறது. ஆறு கடலோடு கலக்கும் தோற்றம் கண்கொள்ளாக் காட்சியாகும். கெடிலத்தின் இந்த முகத்துவாரத்தை யொட்டியுள்ள சூழ்நிலை மிகக் கவர்ச்சியும் அழகும் வாய்ந்தது. மாலை வேளையில் மக்கள் இங்கு பொழுது போக்குவதற்கு ஏற்ற சூழல் அமைந்துள்ளது. சென்னை மரினா கடற்கரை போன்று இது நீளமில்லாவிட்டாலும் அகன்ற மணற் பரப்பைக் கொண்டது. சோலைகள் நிறைந்த சூழ்நிலையும், கடலோடு ஆறு கலக்கும் கண்கவர் காட்சியும் இங்கிலாந்து நாட்டில் உள்ள 'கவுண்டி கடற்கரை' போன்றதென்று புகழப்படுகிறது. 

கடலூர் தீவு : 

உப்பனாற்றிற்கும், கடலூக்கும் நடுவில் ஒரு தீவு இருக்கிறது. இந்தத் தீவிற்குக் கிழக்கு எல்லையாகக் கடலூம், வடக்கு எல்லையாகக் கெடிலத்தின் முக்கிய நடுப்பகுதியும், மேற்கு-தெற்கு எல்லைகளாகக் உப்பனாறும் அமைந்துள்ளன. இந்தக்கழிமுகத் தீவு 'அக்கரை' என அழைக்கப்படுகிறது. இந்த அக்கரைத் தீவில் சோணங்குப்பம், சிங்காரத் தோப்பு, கோரி என்றும் மூன்று சிற்றுர்கள் உள்ளன. இந்தத் தீவு சென்று காணத்தக்கதாகும்.போக்குவரத்திற்குப் படகு வசதி உண்டு. 

செயிண்ட் டேவிட் கோட்டை : 

கெடிலத்தின் முக்கிய நடுப்பகுதிக்கும், அதன் வடகிளைக்கும் நடுவே, தேவனாம்பட்டினம் என்னும் சிற்றுர் உள்ளது. இந்தத் தேவனாம் பட்டினத் தீவில் கடற்கரையையொட்டி கெடிலத்தின் வடகரையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க 'செயிண்ட் டேவிட் கோட்டையைப் பாழடைந்த நிலையில் இன்றும் காணலாம். கோட்டை உள்ள தீவின் முக்கியத்துவத்தை டச்சுக்காரர்களே முதலில் உணர்ந்தனர். இக்கோட்டை 1683-ஆம் ஆண்டு கட்டப்பட்டு பின்னர் விரிவுபடுத்தப்பட்டது. 1712-ஆம் ஆண்டு ராஜாதேசிங்கின் தந்தை சாரூப்சிங் இக்கோட்டையை தாக்கினார். 1745-50 வரை பிரஞ்சுக்காரர்கள் 4 முறை தாக்கியிருக்கிறார்கள்.


அண்ணாமலைப் பல்கலைக் கழகம் : 

Annamalai University1920-ஆம் ஆண்டு மீனாட்சிக் கல்லூரியாக இருந்தது. தமிழரின் மேன்மையை உலகுக்கு எடுத்துக்காட்ட தமிழ்துறை ஏற்படுத்தப்பட்டது. 1929-ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாகஉயர்ந்தது. ராஜா சர்.முத்தையாச் செட்டியாரின் தந்தை அண்ணாமலை செட்டியாரால் உண்டாக்கப்ட்டது. அவர் பெயரில் அமைந்த நகரில் கடற்கரைக்கு 5 கி.மீ தொலைவில் அமைதியான, இயற்கையோடு இயைந்த சூழலில் உள்ளது. சிதம்பரத்திலிருந்து 2 பர்லாங் தூரத்தில் இருக்கிறது. இங்கு எல்லாவகையான பாடங்களும் போதிக்கப் படுகிறது. 1,25,000 மேற்பட்ட நூற்களைக் கொண்ட பெரிய நூலகம் இருக்கிறது. இங்குள்ள தமிழ்துறையில் தமிழகத்தின் சிறந்த தமிழறிஞர்கள் அனைவரும் பணியாற்றியுள்ளனர். எ-கா பண்டிதமணி கதிரேசன் செட்டியார், சோமசுந்தர பாரதியார், சதாசிவ பண்டாரத்தார், போன்றோர் தமிழிசை விழிப்புணர்விலும், இந்திப் போராட்டத்திலும் பெரும்பங்கு இப்பல்கலைக் கழகம் வகித்தது.

இதன் துணை வேந்தர்களாக இருந்தவர்கள்: வி.எஸ்.சீனுவாசசாஸ்த்திரி, கே.வி.ரெட்டி, எஸ்.ஜி. மணவான இராமானுஜம், ஆர்.கே.சண்முகம் செட்டியார், சி.பி.இராமசாமி ஐயர், டி.எம்.நாராயண சாமிபிள்ளை, எஸ்.வி. சிட்டிபாபு போன்ற பெருமக்கள் ஆவர். 

துறைமுகம் : 

கடலூர் முதுநகரில் உள்ளது. கெடில ஆற்றின் முகத்துவாரத்தில் இயற்கையாய் அமைந்த துறைமுகம் ஆகும். இத்துறை முகம் பழமையானது. அந்நிய வாணிபத்தில் சென்னைக்குத் துணையாக உள்ளது. தற்காலம் ஒரு நடுத்தரத் துறைமுகமாக மாற்றப்பட்டு உள்ளது. இரும்புக்கனிகள், எரிபடிவங்கள் ஆகியவை முக்கிய ஏற்றுமதி. கந்தகம், உரம் உணவு தானியம் ஆகியவை முக்கிய இறக்குமதி. பரங்கிப் பேட்டை இம்மாவட்டத்திலுள்ள மற்றொரு துறைமுகம். முன்பு போக்குவரத்து இருந்தது. இன்றும் படகுகள் வந்து போகின்றன. முன்பு உப்பளம் இருந்த இடம் தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரணுவியல் ஆராய்ச்சிப்பிரிவு உள்ளது. 

முக்கிய ஊர்கள் : 

நெய்வேலி :  Neyveli

விழுப்புரத்திற்கும்-கடலூருக்கும் இடையில் உள்ளது. 1870-ஆம் ஆண்டிலேயே நெய்வேலியில் நிலக்கரி இருப்பது ஆங்கிலேயருக்குத் தெரியும். 1943-44 ஆண்டுகளில் இங்கு 100 சதுர மைல் பரப்பளவில் ஏறத்தாழ 250 கோடி டன்கள் நிலக்கரி இருப்பதாக மதிப்பிடப்பட்டது. அப்போதெல்லாம் இவ்விடம் பெரும்காடாகக் கிடந்தது. 1953-இல் 145 அடி தோண்டப்பட்டது. நிலத்தடி நீரை வெளியேற்ற ஆரம்பித்தனர். 1961- ஆகஸ்ட் 24ம் நாள் லிக்னைட் படிவம் முதன் முதல் காட்சி தந்தது. நிலக்கரியால் லாபமில்லை என்றதனால் அதை எரித்து அந்த வெப்பசக்தி கொண்டு, மின்விசை உற்பத்தி செய்வதால் லாபம் என உணரப்பட்டு மின்விசை நிலையம் அமைக்கப்பட்டது. 

உரம் : 

ஆண்டுதோறும் 5 இலட்சம் டன் பழுப்பு நிலக்கரியைக் கொண்டு உரத்தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது. 

பி.அண்டு.சி. ஆலை : 

Briquetting and Corbonisation Plant :

பழுப்பு நிலக்கரியைப் பதப்படுத்தி வீடுகளின் உபயோகத்திற்கான கரியாக அதை மாற்றியமைப்பதைத் தவிர இந்த ஆலையிலிருந்து பெறப்படும் வேறு பொருள்கள்: கரித்தூள், தார், நியூட்ரல் எண்ணெய், கார்பாலிக் அமிலம், பினால், ஆர்த்தோ கிரிசோல், மெட்டா மற்றும் பாராகிரிசோல், சைலினால். 

நெய்வேலி நகரியம் :

இந்நகர் 31 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 10கி.மீ நீளமும், 3கி.மீ அகலமும் கொண்ட இந்நகரில் 10,000 க்கு அதிகமான பணியாளர்கள் வாழ்கின்றனர்.

கடலூர் புதுநகர் : 

சென்னைக்கு நேர் தெற்கே 100 மைல் தொலைவிலுள்ளது. மஞ்சக் குப்பம்,புதுப்பாளையம், தேவனாம்பட்டணம், வில்வராய நத்தம், வன்னியர் பாளையம் முதலிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டது. கெடிலம் ஆறு கடலூர் நகரைச் சுற்றியும், நகருக்கு நடுவேயும் ஓடுகிறது. நகருக்கு அருகில் கடலில் கலக்கிறது. மாவட்டத் தலைநகராக இருப்பதால் நீதிமன்றம், கல்வி, மருத்துவ நிலையங்கள் அரசு அலுவலகங்கள் இங்குள்ளன. வணிகத் தலமாகவும் இது இருந்து வருகிறது.

பண்ணுருட்டி : 

பலாப்பழம், முந்திரிபழம், முந்திரிக்கொட்டை, முந்திரிப்பயறு, முந்திரி எண்ணெய் போன்றவைகளுக்கு பண்ணுருட்டி பெயர் பெற்றது. மிக முக்கியமான மொத்த சந்தையுள்ள வணிகத்தலம். வடக்குத்துக் கிராமத்தில் பேப்பர் மில் ஒன்று, கங்கா பேப்பர் மில் என இயங்கி வருகிறது.

நெல்லிக்குப்பம் : 

முஸ்லீம்கள் நிறைந்த ஊர். இங்கு ஈ.ஐ.டிபாரி நிறுவனத்தாரால் நடத்தப்படும் சர்க்கரை ஆலை ஒன்றும், மிட்டாய் தொழிற்சாலையும் உள்ளன. கரும்பு உற்பத்தி இவ்வட்டத்தில் அதிகம். அதுபோல வெற்றிலை, அகத்திக்கீரை, அவுரிஎண்ணெய் முதலியவை இங்குப் பெயர் பெற்றவை.

பரூர் : 

விருத்தாசலத்திற்கு வடமேற்கில் உள்ளது இவ்வூர். இங்குள்ள சர்சில் மாதாவின் சிலையும், கிறிஸ்துவின் சிலையும் மணிலாவிலிருந்து வரவழைக்கப்பட்டவை. இவை மரத்தாலானவை. சிறப்பாக வண்ணம் தீட்டப்பெற்றவை, அதில் இந்திய அணிகலன்கள் இருப்பது சிறப்பு.

வடலூர் : 

Vadalurகடலூர்-விருத்தாசலம் சாலையில் வடலூர் உள்ளது. வடலூர் என்றாலே இராமலிங்கசுவாமிகளின் நினைவுதான் யாருக்கும் வரும். அங்கே சத்திய ஞான சபை,தாமரை வடிவில் எண்கோண முடையதாய்ப் புதிய முறையில் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து காட்சியளிக்கிறது. அதில் இறைவனை ஏழு திரைகள் விலக்கி ஒளி வடிவாய்க் காணும் 'ஒளி வழிபாடு' நடைபெற்று வருகிறது. இங்கு தைப்பூசத்தில் மிகப் பெரிய விழா நடைபெறுகிறது. வடலூருக்கு அருகில் மேட்டுக்குப்பத்தில் அடிகள் தங்கியிருந்த மனைக்குச் 'சித்திவளாகம்' என்பது பெயர்.

புகழ்பெற்ற பெருமக்கள் :

அப்பர், சுந்தரர், சந்தான குரவர்கள் நால்வர், அருணந்தி சிவாச்சாரியார்,மனவாசகம் கடந்தார், வேதாந்த தேசிகர், அருட்பெரும் ஜோதி இராமலிங்கர், திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள். கடலூர் சுப்பராயலுரெட்டியார், தெய்வநாயகம் அய்யா, கனகசபை பிள்ளை, தங்கராஜ் முதலியார், வழக்கறிஞர் இளம் வழுதி, கல்வி வள்ளல் ஏ.ஆர். தாமோர முதலியார், பண்ணுருட்டி இராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, கடலூர்-விடுதலை கி.வீரமணி, ரெவரண்டு ஞானப்பிரகாசம், ரெவரெண்டு மரியதாஸ், விருத்தாசலம் பூவராகன், தி.கி.நாராயணசாமி நாயுடு முதலியோர்.

Thursday 27 November 2014

நம்ம கடலூர்: கடலூர் மாவட்ட அமைவிடம்

கடலூர் மாவட்டம் தமிழ் நாட்டிலுள்ள மாவட்டங்களில் ஒன்று. கடலூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகர். இவ்வூர்க் கடலில் உப்பனாறு, பரவனாறு முதலியவை கூடும் இடங்கள் 4 இடங்களில் உள்ளது. ஆகவே கூடலூர் என்ற பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம்.


எல்லைகள்:
தெற்கே திருச்சிராப்பள்ளி மாவட்டமும் தென்கிழக்கே நாகப்பட்டினம் மாவட்டமும், கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே விழுப்புரம் மாவட்டமும், இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.

முன்பு தமிழ்நாட்டில் மொத்தம் எட்டு மாவட்டங்களே இருந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் பெயர் தென்னாற்காடு மாவட்டம் என இருந்தது. அப்போது விழுப்புரம் மாவட்டமும் இம்மாவட்டத்திலேயே அடங்கி இருந்தது. மற்ற மாவட்டங்கள் அப்போது பெரும்பாலும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தன. அதன்பிறகு மாவட்டங்களுக்குப் பெரியோரின் பெயர்களைச்சூட்டி அழைக்கும் முறை வந்தது. அதனால் சில சிக்கல்கள் ஏற்பட்டதால் மீண்டும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்படும் மாற்றம் வந்ததையடுத்துத் தற்போது கடலூர் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.

புவியியல்:

ஆறுகள்:-
கெடிலநதி, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம் மற்றும் மணிமுத்தாறு ஆகிய ஆறுகள் பாய்கின்றன.

அணைகட்டுகள்:-
திருவதிகை அணை, வானமாதேவி அணை மற்றும் திருவஹீந்திரபுரம் அணை ஆகிய அணைகள் அமைந்துள்ளன.

அலையாத்திக் காடுகள்:-
பிச்சாவரம், கெடிலம் ஆகிய கடலோரப்பகுதிகளில் அலையாத்திக் காடுகள் (Mangrove) உள்ளன. 

நிர்வாகம்:

கடலூர் மாவட்ட வட்டங்கள்:-

வட்டங்கள்:-
கடலூர் மாவட்டம் 7 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

கடலூர்
பண்ருட்டி
விருத்தாச்சலம்
சிதம்பரம்
காட்டுமன்னார்கோயில்
திட்டக்குடி
குறிஞ்சிப்பாடி
குறிஞ்சிப்பாடி மட்டும் தற்போது பிரிக்கபட்டுள்ளது.


கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்:

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்:-
உலக தரம் வாய்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இங்கே உள்ளன.

ஊராட்சி ஒன்றியங்கள்:-
கடலூர் மாவட்டம் 13 ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

கடலூர்
அண்ணாகிராமம்
பண்ருட்டி
குறிஞ்சிப்பாடி
கம்மாபுரம்
விருத்தாச்சலம்
நல்லூர்
மங்கலூர்
மேல்புவனகிரி
பரங்கிப் பேட்டை (போர்ட்டா நோவா)
கீரப்பாளையம்
குமராட்சி
காட்டுமன்னார்கோயில்

தொழில்வளம்:
சிப்காட் இங்கே தொழில் பகுதியாக விளங்குகிறது. மேலும் பல தொழில்களும் நடைபெறுகின்றன. மேலும் நெய்வேலி நகரியமும் இம்மாவட்டத்தில் உள்ளது. என்.எல்.சி. என்றழைக்கப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இந்தியாவிற்கான மின்சாரத்தேவையை நிறைவேற்றுவதில் முதன்மையானது.

சுற்றுலாத் தலங்கள்:
பிச்சாவரம், கெடிலத்தின் கழிமுகம், கடலூர் தீவு, வெள்ளி கடற்கரை, புனித டேவிட் கோட்டை, கடலூர் துறைமுகம், சிதம்பரம் நடராசர் கோயில், வடலூரில் வள்ளலார் அமைத்த சத்ய ஞான சபை, விருத்தாசலம் விருத்தகிரிஸ்வரர் கோயில், திருமுட்டம் ஆதிவராக சுவாமி கோயில் மேல்பட்டாம்பாக்கம் 400 வருட சிவன் கோவில் சரபேசுவரர், பள்ளிவாசல் மசூதி போன்றவை கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள் ஆகும். மேலும் காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள மேலக்கடம்பூர் சிவன் கோயில் மிக பிரசித்தி பெற்ற தலம், கரக்கோயில் எனப்படும் தேர் வடிவ கோயில் இங்கு மட்டுமே உள்ளது

Saturday 22 November 2014

Cuddalore under British Regime:


Europeans started establishing their business settlements in Indian coast ever since 17th century. In the eastern coast French established their business settlements in Pondicherry and British established their settelements and business establishments in Cuddalore. Later British started ruling the region and they built several forts.Fort St.David was the first fort built by British. Robert Clive, who laid a strong foundation for British rule in Indian subcontinent, used St.David Fort as the centre for his military operations.


Fort St.David: Fort St.David was built in 1653 A.D. by Elihu Yale. The fort was strengthened on 1693, 1698,1702,1725,1740 and on 1745. Until 1758 Cuddalore was the capital to South Indian terrioties which was under British control then. British ruled a greater part of South India (entire Tamil Nadu, parts of present Andra Pradesh, Kerala and Karnataka) from this fort (St.David). The fort was attacked by French in 1758.It was after this attack St.David Fort lost its political importance. The operational power was shifted to Fort St.George, Madras. Even today the post office in Devanampattinam (popularly known as Silver Beach) uses the rubberstamp with Ft. St.David embossed in it.


Garden House: The present official residence of Cuddalore District Collector was then known as Garden House. It was then the residence of Robert Clive. The roof of the Garden House was built without steel and wood. It was built using only bricks and slaked lime. It bears testimony of the later medieval architecture. St.David fort was also built using the same ingredients and techniques. The large vacant space next to Garden House which now knows Chevalier Shivaji Arangam or Manajai Nagar Ground was an esplanade then. British used to have esplanades near their fortresses.

Brookes Pet: Brookes Pet is half a kilometer from present Vandipalayam.It was named after Henry Brookes who ruled between 1767 and 1769.
Cumming Pet: The area to north of Thriupathiripuliyur is known as Cumming Pet.It was named after William Cumming who ruled the region from 1778.Cumming Pet was once a place meant for washermen.On 1798 Tipu Sultan-The King of Mysore invaded Cumming Pet and the settelements there cleared on the invasion.

Cuddalore Old Town (O.T.) Present day Cuddalore O.T. was known as Islamabad during the Mughal period. Even today the majority of the people in Cuddalore O.T. follow Islam. Cuddalore O.T. has one of the oldest and biggest mosques in South India. The mosque and most of the houses there (still) were built in Persian style. Until 1866 District Collectorate, Cuddalore Municipal Office and other administrative offices were in present Cuddalore O.T.In 1866 all these offices were shifted to Manjai Nagar.It was only after the shift in 1866 the term Cuddalore OT and Cuddalore NT (NewTown) came into existance.Still there are several streets and localities named after popular British rulers. Clive Street, Wellington Street is some to name.

Gadilam Castle: Nawab Umdat-ul-Umara built Gadilam Castle in 18th century. Gadilam Castle was located to the North of Gadilam River. It was built exactly in the place where the present Brindhavan Hotel is located.

Capper Hills: Capper Hills was named after Francis Capper who was the Captain till 1796.He resided in a palace in there. British buit a prison in the Capper Hills. Freedom fighters like Barathiar and other prisoners of war were imprisoned there.

British educational intuition: In 1717 St.David school was started in Cuddalore O.T. to educate the children of East India Company.On 1886 a college was started in its premises. The college was named after St.Joseph.It is one of the earliest schools in India which follows Western education system. Roads named after British like Napier Road, Lawrence Road, Imperial Road and streets like Clive street, Wellington street, business establishments like Panpari market and Parry's House remains a reminder of the British rule here.