வெலிங்டன் ஏரி (அ) எமினேரி என்பது தமிழகத்தின் கடலூர் மாவட்டம், திட்டக்குடிக்கு அருகே கீழ்ச்செருவாய் என்னும் கிராமத்தில் உள்ள ஓர் ஏரி. இது கடலூர் மாவட்டத்தில் உள்ள 25,000 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி அளிக்கிறது.
திட்டக்குடி-திருச்சி முக்கியச்சாலையில் கீச்செருவாய் அமைந்துள்ளது. கீழ்ச்செருவாயில் வெலிங்டன் நீர்த் தேக்கம் , 1918-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. வெலிங்டன் ஏரி என்றிருந்தாலும் கூட, பரவலாக "எமினேரி" என்று அழைக்கப்டுகிறது. உருவான போது, மொத்த கொள்ளளவாக 31 அடி இருந்தது. பல ஆண்டுக்குப் பின்னர் ஏரியின் உயரம் 32 அடியாக உள்ளது. அண்மையில் ஏரியின் கரை 300 மீட்டர் நீளத்துக்கு தொடர்ந்து பூமிக்குள் அழுந்திக் கொண்டு இருந்ததால், பலவீனப்பட்டு வந்தது. அதனால், ரூ. 30 கோடி செலவிட்டு, கரை பலப்படுத்தப்பட்டது. சீரமைப்புக்குப் பின்னர், மொத்த கொள்ளளவு 29.4 அடிதான் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை பெய்தால் வெள்ளாற்று வழியாக தொழுதூர் அணைக்கட்டுக்கு தண்ணீர் வரும். அங்கு சேமித்து வைக்கப்படும் தண்ணீர் குறிப்பிட்ட அடி உயர்ந்ததும், அங்கிருந்து வெலிங்டன் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஏரியானது, மேல்மட்டக் கால்வாய், கீழ் மட்டக் கால்வாய் என இரண்டு பகுதிகளாகப் பிரித்து விவசாயத்திற்கு நீர் வழக்கப்படுகிறது. கீழ்மட்டக் கால்வாய் மூலம் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன் அடையும். . நீர்ப்பாசனத்திற்கு மட்டுமின்றி, மீன் வளர்ப்புக்காகவும் இந்த ஏரி பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
Regards,
நம்ம கடலூர்(Our Cuddalore):
No comments:
Post a Comment